LOADING...

உலகம்: செய்தி

25 Sep 2025
அமெரிக்கா

அரசு ஊழியர்களை கொத்துக் கொத்தாக பணி நீக்கம் செய்ய தயாராகும் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம்?

அமெரிக்காவில் அடுத்த வாரம் அரசாங்கம் மூடப்படக்கூடிய சூழ்நிலையில், வெள்ளை மாளிகை கூட்டாட்சி நிறுவனங்களை ஒட்டுமொத்தப் பணிநீக்கங்களுக்குத் (Mass Firings) திட்டமிடுமாறு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியா பங்களாதேஷ் உறவு மோசமானதற்கு காரணம் இதுதான்; முகமது யூனுஸ் குற்றச்சாட்டு

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி நீக்கம் செய்ய வழிவகுத்த கடந்த ஆண்டு நடந்த மக்கள் போராட்டங்கள் குறித்து இந்தியா அதிருப்தி தெரிவித்ததால்,இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக பங்களாதேஷின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

25 Sep 2025
பிரான்ஸ்

லிபியா தேர்தல் நிதி வழக்கில் முன்னாள் பிரெஞ்சு அதிபர் நிக்கோலஸ் சர்கோசிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

முன்னாள் பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசிக்கு தேர்தல் நிதிச் சதி வழக்கில் பாரிஸ் நீதிமன்றம் வியாழக்கிழமை (செப்டம்பர் 25) ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

நிபந்தனையுடன் ஒரு வருடத்திற்கு புதிய START ஒப்பந்தத்தை நீட்டிக்க அமெரிக்காவிடம் ரஷ்ய அதிபர் புடின் முன்மொழிவு

அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே எஞ்சியிருக்கும் கடைசி அணு ஆயுதக் கட்டுப்பாடு ஒப்பந்தமான புதிய START (New Strategic Arms Reduction Treaty) ஒப்பந்தத்தை ஒரு வருடத்திற்கு நீட்டிக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் முன்மொழிந்துள்ளார்.

22 Sep 2025
அமெரிக்கா

அமெரிக்காவின் எச்1பி விசா கட்டண உயர்வால் சிக்கல்; இந்த 5 நாடுகள் மீது பார்வையைத் திருப்பும் இளைஞர்கள்

அமெரிக்காவின் எச்1பி விசாவிற்கு விதிக்கப்பட்டுள்ள $100,000 புதிய கட்டணம், உலகின் திறமையான பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் தொழில் இலக்குகளை மாற்றி அமைத்துள்ளது.

பாகிஸ்தான் நடந்துகொள்வதைப் பொறுத்து ஆபரேஷன் சிந்தூர் 2.0: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

மொராக்கோவுக்கான தனது வரலாற்று சிறப்புமிக்க பயணத்தின்போது, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாத ஆதரவு தொடர்ந்தால், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரமடையலாம் என்று தெரிவித்தார்.

பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவித்த பிரிட்டன் மற்றும் கனடா

பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகள், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் எதிர்ப்புகளுக்கு மத்தியில், பாலஸ்தீனத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளன.

நேபாளத்தைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸிலும் ஆட்சி மாற்றமா? ஊழலுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் தலைநகரில் போராட்டம்

ஊழலுக்கு எதிராக பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்தியதால், நாடு பெரும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

21 Sep 2025
அமெரிக்கா

எச்1பி விசா கட்டண உயர்வு இவர்களுக்கு மட்டும்தான்; டிரம்ப் நிர்வாகம் புதிய விளக்கம்

இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு பெரும் நிம்மதி அளிக்கும் வகையில், அமெரிக்க அதிகாரிகள் புதிய $100,000 கட்டண உயர்வு புதிய எச்1பி விசா விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், ஏற்கனவே விசா வைத்திருப்பவர்களுக்கு அல்ல என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

எச்1பி கட்டண உயர்வு எதிரொலி; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு அவசர உதவி எண்ணை வெளியிட்டது இந்திய தூதரகம்

புதிய எச்1பி விசாக்களுக்கான விண்ணப்பங்களுக்கு $100,000 ஒருமுறை கட்டணத்தை விதிக்கும் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவைத் தொடர்ந்து, அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்காக அவசர உதவி எண்ணை அறிவித்துள்ளது.

சூரிய கிரகணம் கர்ப்பிணிகளுக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துமா? அறிவியல்பூர்வ உண்மைகள்

இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம், ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 21) அன்று நடைபெற உள்ளது.

20 Sep 2025
அமெரிக்கா

அமெரிக்காவில் கோல்ட் கார்டு விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியது டொனால்ட் டிரம்ப் நிர்வாகம்

அமெரிக்காவின் குடியுரிமை பெறும் விசா திட்டத்தில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய டொனால்ட் டிரம்ப் நிர்வாகம், வசதி படைத்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கான புதிய கோல்ட் கார்டு விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

H-1B விசாவிற்கான கட்டணத்தை $100,000 ஆக உயர்த்தியது டொனால்ட் டிரம்ப் நிர்வாகம்; இந்திய பணியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?

H-1B விசா திட்டத்தில் ஒரு பெரிய சீர்திருத்த நடவடிக்கையாக, டிரம்ப் நிர்வாகம் வெளிநாட்டு ஊழியர்களைப் பணிக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கான வருடாந்திர கட்டணத்தை $100,000 ஆக உயர்த்தியுள்ளது.

18 Sep 2025
பிரான்ஸ்

மனைவி மீதான அவதூறு பிரச்சாரம்; அமெரிக்காவிலேயே வழக்கு தொடர பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் முடிவு

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் அவரது மனைவி பிரிஜிட் மக்ரோன், அமெரிக்க வலதுசாரி அரசியல் விமர்சகர் கேன்டேஸ் ஓவன்ஸ் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளனர்.

18 Sep 2025
ஜப்பான்

அரசியலிலும் செயற்கை நுண்ணறிவு; ஜப்பானில் கட்சித் தலைவராக ஏஐ நியமனம்

ஜப்பானின் பாத் டு ரீபர்த் (Path to Rebirth) என்ற அரசியல் கட்சி, தனது தலைவரை ஒரு செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கொண்டு மாற்றியமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

18 Sep 2025
இஸ்ரேல்

இஸ்ரேல் வான் பாதுகாப்பில் ஒரு புதிய சகாப்தம்; அயர்ன் பீம் லேசர் ஆயுதத்தை பயன்படுத்த் தொடங்கியது

ராணுவத் தொழில்நுட்பத்தில் ஒரு மிகப்பெரிய பாய்ச்சலாக, இஸ்ரேல் உலகின் முதல் சக்திவாய்ந்த மற்றும் போரில் சோதிக்கப்பட்ட லேசர் இடைமறிப்பு அமைப்பான அயர்ன் பீமை பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

சார்லி கிர்க் படுகொலை எதிரொலி: தீவிர இடதுசாரி அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்

அன்டிஃபா (Antifa) என்ற தீவிர இடதுசாரி அமைப்பை பெரிய பயங்கரவாத அமைப்பு என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை (செப்டம்பர் 18) அறிவித்துள்ளார்.

15 Sep 2025
லாகூர்

ராவி ஆற்று வெள்ளத்தால் 40 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளத்தில் மூழ்கிய பாகிஸ்தானின் லாகூர் நகரம்

பாகிஸ்தானின் லாகூரில் 40 ராவி ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக இல்லாத வகையில், வரலாறு காணாத வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளது.

15 Sep 2025
நேபாளம்

ஊழல் இல்லாத ஆட்சி, இந்தியாவுடன் நெருங்கிய உறவு; நேபாளத்தின் ஜென் ஜி இயக்கம் வலியுறுத்தல்

முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியை ராஜினாமா செய்ய வைத்த இளைஞர்களின் போராட்டத்திற்குப் பிறகு, நேபாளத்தின் ஜென் ஜி இயக்கம், ஊழல் இல்லாத அரசியல் அமைப்பை உருவாக்கும் ஒரு நீண்டகால இலக்கை நோக்கிச் செயல்பட்டு வருகிறது.

15 Sep 2025
அமெரிக்கா

அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்ததாக இந்திய மூதாட்டி கைது; விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் தீவிரம்

அமெரிக்கக் குடியுரிமை மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவினரால் (ICE), 73 வயதான இந்திய மூதாட்டி ஹர்ஜித் கவுர் கைது செய்யப்பட்டதற்கு எதிராகக் கலிஃபோர்னியாவில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.

14 Sep 2025
பிரிட்டன்

லண்டனில் வெளிநாட்டவர் குடியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த மாபெரும் பேரணியில் வன்முறை

பிரிட்டனில் வெளிநாட்டவர்களின் குடியேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வலதுசாரி ஆர்வலர் டாமி ராபின்சன் தலைமையில் லண்டன் நகரின் மையத்தில் ஒரு பெரிய பேரணி நடைபெற்றது.

வெள்ள நிவாரண நிதியை பயங்கரவாத அமைப்பை மீண்டும் கட்டமைக்க கொடுக்கும் பாகிஸ்தான்; பகீர் தகவல்

இந்திய விமானப்படை மே 7 ஆம் தேதி தொடங்கிய ஆபரேஷன் சிந்தூர் வான் தாக்குதலில், பாகிஸ்தானில் உள்ள மார்க்கஸ் தொய்பா தலைமையகத்தை லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு மீண்டும் கட்டி வருகிறது.

13 Sep 2025
ஐநா சபை

இஸ்ரேல்-பாலஸ்தீன இரு நாட்டுத் தீர்வுக்கான நியூயார்க் பிரகடனம் ஐநா சபையில் நிறைவேற்றம்; தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

13 Sep 2025
ரஷ்யா

ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் மீண்டும் சக்திவாய்ந்த 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தின் கிழக்குப் பகுதியில் இன்று, 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

13 Sep 2025
நேபாளம்

நேபாளத்தின் இடைக்காலப் பிரதமராக சுசீலா கார்க்கி பதவியேற்றார்; முதல் பெண் பிரதமராக சாதனை

நேபாளத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்க்கி, நாட்டின் இடைக்காலப் பிரதமராகப் பதவியேற்றுள்ளார்.

12 Sep 2025
அமெரிக்கா

சார்லி கிர்க் துப்பாக்கிச் சூடு வழக்கில் முக்கிய நபர் ராபின்சன் கைது

பழமைவாதச் செயற்பாட்டாளரான சார்லி கிர்க்கை சுட்டுக் கொன்ற வழக்கில், டைலர் ராபின்சன் என்ற 22 வயது நபர் உட்டாவில் முக்கியக் குற்றவாளியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

12 Sep 2025
நேபாளம்

நேபாளத்தின் இடைக்காலப் பிரதமராக சுசீலா கார்க்கி இன்று இரவு பதவியேற்க உள்ளதாக தகவல்

நேபாளத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியான சுசீலா கார்க்கி, அந்நாட்டின் இடைக்காலப் பிரதமராக வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) இரவு பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

12 Sep 2025
பிரேசில்

பிரேசிலின் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு ஆட்சிக் கவிழ்ப்பு சதி வழக்கில் 27 ஆண்டுகள் சிறை

பிரேசிலின் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, 2022 தேர்தலில் தோல்வியடைந்த பிறகு ஆட்சியில் நீடிக்க சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, 27 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

11 Sep 2025
நேபாளம்

நேபாள இடைக்கால அரசாங்கத்திற்குத் தலைமை தாங்க முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்க்கி சம்மதம்

நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்திற்குத் தலைமை தாங்க, முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்க்கி தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.

07 Sep 2025
உக்ரைன்

உக்ரைன் அரசு கட்டிடங்கள் மீது ரஷ்யா தாக்குதல்; பதிலடி கொடுத்த உக்ரைன்

உக்ரைன் தலைநகர் கீவ்வில் உள்ள கேபினட் உட்பட அரசு கட்டிடங்கள் மீது ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில், ஒரு வயது குழந்தை உட்பட குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர்.

எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் அனுட்டின் சார்ன்விரகுல் தாய்லாந்தின் புதிய பிரதமராகப் பதவியேற்பு

தாய்லாந்தின் மூத்த அரசியல்வாதியான அனுட்டின் சார்ன்விரகுல், நாட்டின் புதிய பிரதமராக அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றுள்ளார்.

07 Sep 2025
ஜப்பான்

தேர்தல் தோல்வியால் கட்சி உடைவதைத் தவிர்க்க ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா பதவி விலக முடிவு

ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, ஜூலை மாத நாடாளுமன்றத் தேர்தலில் தனது கட்சிக்கு ஏற்பட்ட வரலாற்றுத் தோல்விக்குப் பொறுப்பேற்றுப் பதவி விலக முடிவு செய்துள்ளார்.

06 Sep 2025
கனடா

நாட்டில் காலிஸ்தான் பயங்கரவாதிகள் செயல்படுவது உண்மைதான்; அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தது கனடா

கனடாவில் இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த இந்தியாவின் நீண்டகால கவலைகளை, கனடா அரசின் புதிய அறிக்கை உறுதி செய்துள்ளது.

06 Sep 2025
அமெரிக்கா

அமெரிக்காவில் இனி பாதுகாப்புத் துறை கிடையாது? பெயரை போர்த்துறை என மாற்றி டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க ராணுவ பலத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில், அதிபர் டொனால்ட் டிரம்ப், பாதுகாப்புத் துறையின் பெயரை அதிகாரப்பூர்வமாக போர்த் துறை (Department of War) என மாற்றி நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.

05 Sep 2025
பிரிட்டன்

வீடு வாங்கியதற்கு முத்திரை வரி செலுத்த தவறியது அம்பலமானதால் பிரிட்டன் துணைப் பிரதமர் ராஜினாமா

பிரிட்டனின் துணைப் பிரதமர் ஏஞ்சலா ரேனர், தான் வாங்கிய வீடு தொடர்பான வரிச் சர்ச்சையில், அமைச்சர்களுக்கான நடத்தை விதிகளை மீறியதாகக் கண்டறியப்பட்டதை அடுத்து, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

05 Sep 2025
அமெரிக்கா

அமெரிக்காவில் 'முத்தமிடும் பூச்சி' பரவலால் சாகஸ் நோய் அதிகரிப்பதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

அமெரிக்காவின் 32 மாகாணங்களில் 'முத்தமிடும் பூச்சிகள்' (kissing bugs) என அழைக்கப்படும் டிரையாடோமைன் பூச்சிகளின் பரவல் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த பூச்சிகள், சாகஸ் நோயைப் பரப்புகின்றன.

04 Sep 2025
நேபாளம்

அரசின் உத்தரவை மதிக்காததால் நேபாளத்தில் ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட முக்கிய சமூக வலைதளங்களுக்குத் தடை

நேபாள அரசு, உள்நாட்டு விதிமுறைகளின்படி பதிவு செய்யத் தவறியதற்காக, ஃபேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற முக்கிய சமூக வலைதளங்களுக்குத் தடை விதித்துள்ளது.

இந்தியா அனைத்து வரிகளையும் நீக்க முன்வந்ததாம்; புதிய சர்ச்சையைக் கிளப்பிய டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா அனைத்து வரிகளையும் நீக்க முன்வந்ததாக தெரிவித்து புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

01 Sep 2025
விருது

உலக சிறந்த பீருக்கான விருதுகள் 2025: பல்வேறு பிரிவுகளில் விருது வென்று இந்திய பீர்கள் சாதனை

இந்திய மதுபான நிறுவனங்களின் தயாரிப்புகள், உலக பீருக்கான விருதுகள் 2025இல் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 800 க்கும் மேல் அதிகரிப்பு; மீட்புப் பணிகள் தீவிரம்

கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 31) இரவு 11.47 அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 800 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 500 க்கும் மேல் அதிகரிப்பு

ஆப்கானிஸ்தானின் தென்கிழக்குப் பகுதியில், பாகிஸ்தான் எல்லைக்கு அருகே, திங்கட்கிழமை (செப்டம்பர் 1) அதிகாலை 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தேசிய நில அதிர்வு மையம் (NCS) இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

31 Aug 2025
சீனா

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவரை சந்தித்த பிரதமர் மோடி; யார் இந்த சாய் கி?

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டின் இடையே, பிரதமர் நரேந்திர மோடி, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CCP) முக்கிய தலைவரும், அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு மிகவும் நெருக்கமானவருமான சாய் கியை சந்தித்துப் பேசினார்.

பிரிக்ஸ் குழுவை வலுப்படுத்த முயற்சி; சீன அதிபர் ஜி ஜின்பிங்கை பாராட்டினார் விளாடிமிர் புடின் 

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சீனா வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ரஷ்யா மற்றும் சீனா இடையிலான வலுவான உறவைப் பாராட்டினார்.

மோடி சான்: ஜப்பான் பயணத்தின் கடைசி நாளில் பிரதமர் மோடிக்குச் செண்டாயில் உற்சாக வரவேற்பு

தனது ஜப்பான் பயணத்தின் இரண்டாவது மற்றும் கடைசி நாளான சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 30), பிரதமர் நரேந்திர மோடிக்குச் செண்டாய் நகரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

30 Aug 2025
இஸ்ரேல்

ஏமனில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: ஹூத்தியின் பிரதமர் உள்ளிட்ட உயர்மட்ட தலைவர்கள் பலி

ஏமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஈரானின் ஆதரவு பெற்ற ஹூத்தி பிரதமர் அஹமது அல்-ரஹவி கொல்லப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸிற்கான ரகசிய சேவை பாதுகாப்பை நீக்கினார் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸிற்கான ரகசிய சேவைப் பாதுகாப்பை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்துள்ளார்.

24 Aug 2025
இஸ்ரேல்

ஹூத்தி ஏவுகணைக்குப் பதிலடியாக ஏமனில் இஸ்ரேல் பதிலடி தாக்குதல்

ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலை நோக்கி ஏவுகணையை ஏவியதாகக் கூறியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் பதற்றம் வார இறுதியில் கடுமையாக அதிகரித்துள்ளது.

24 Aug 2025
ரஷ்யா

அணுசக்தி நிலையம் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியதாக ரஷ்யா பரபரப்புக் குற்றச்சாட்டு

உக்ரைன் தனது 34-வது சுதந்திர தினத்தை ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 24) கொண்டாடிய நிலையில், ரஷ்யாவுடனான போர் தீவிரமடைந்தது. ரஷ்யா மீதான உக்ரைனின் டிரோன் தாக்குதல்கள், ஏவுகணை வீச்சுகள் ஆகியவை தலைப்புச் செய்திகளை ஆக்கிரமித்துள்ளன.

23 Aug 2025
இந்தியா

புதிய வரிவிதிப்பு நடைமுறையால் அமெரிக்காவிற்கான அஞ்சல் சேவைகளை இந்தியா நிறுத்திவைப்பு

இந்தியா, அமெரிக்காவிற்கான பெரும்பாலான அஞ்சல் சேவைகளை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளது.

இந்தியாவுக்கான அடுத்த அமெரிக்க தூதராக நெருங்கிய உதவியாளர் செர்ஜியோ கோரை நியமனம் செய்தார் டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது நெருங்கிய அரசியல் உதவியாளரான செர்ஜியோ கோரை, இந்தியாவுக்கான அடுத்த அமெரிக்க தூதராகவும், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான சிறப்புத் தூதராகவும் நியமித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தனது மூன்று நாள் ரஷ்ய பயணத்தின் ஒரு பகுதியாக, வியாழக்கிழமை (ஆகஸ்ட் 21) அன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை மாஸ்கோவில் சந்தித்தார்.

18 Aug 2025
தேர்தல்

2026 தேர்தலில் தபால் வாக்கு, மின்னணு வாக்களிக்கும் இயந்திரங்களுக்கு தடை? புதிய மாற்றத்திற்கு தயாராகும் அமெரிக்கா

அமெரிக்க தேர்தல் முறையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்களன்று (ஆகஸ்ட் 18) ஒரு நிர்வாக ஆணையில் கையெழுத்திட இருப்பதாக அறிவித்துள்ளார்.

நியூயார்க்கில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி; எட்டு பேருக்கு காயம்

அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 17) அதிகாலையில் நியூயார்க்கில் புரூக்ளின் உணவகத்திற்குள் பல துப்பாக்கியேந்திய நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் எட்டு பேர் காயமடைந்தனர்.

பாகிஸ்தானில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு அசிம் முனீர் நிராகரிப்பு

பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர், பாகிஸ்தானில் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்புக்கு வாய்ப்புள்ளதாக வரும் ஊகங்கள் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.